வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
அண்மைக்காலம் :
1950 களை அடுத்த காலப்பகுதியில் மீளவும் திருப்பணி வேலைகள் தொடர்ந்தன. 1960இல் உள்வீதிக் கொட்டகைகள் போடப்பட்டன. பொதுமக்கள் பலர் திருப்பணி வேலைகளுக்கு உதவினர். ஆலயத் திருப்பணி வேலைகளில் தொண்டாற்றிய சோ. சீவரத்தினம் அவர்கள் முக்கியமானவர். வீடு வீடாகச் சென்று பிடியரிசி எடுத்து திருப்பணி வேலைகளுக்கு உதவினார். பூந்தோட்டம் அமைப்பதில் பெரிதும் தமது முயற்சிகளை மேற்கொண்டார். ஆலயத்தில் இன்று காணப்படும் தென்னம்பிள்ளைகள் இவரால் நடப்பட்டவையாகும். இவரின் வரிசையில் ஆ. வி. நாகலிங்கம் அவர்களும் மனேஜராக கடமையாற்றி திருப்பணி வேலைகளுக்கு உதவினார். பிடியரிசித் திருப்பணியில் திரு. சிவலை கந்தையர் என்பவரும் முக்கியம் பெற்று விளங்கினார். சிறிய பனையோலையால் செய்யப்பட்ட குட்டான்களில் வீடு வீடாகச் சென்று அரிசி பெற்றுத் திருப்பணிக்கு உதவினார்.
1960இல் பரிபாலனசபையில் திரு.நா.சரவணமுத்து அவர்கள் தலைவராகவும் க.சண்முகலிங்கம் தனாதிகாரியாகவும் திரு.ந.கணேசபிள்ளை அவர்கள் செயலாளராகவும் கடமையாற்றினர். இவர்களுடைய காலத்தில் ஆலயம் புதுப்பொலிவு பெற்றது. மிக நீண்ட 3Ꮛ fᎢ 6ü ᏞᏝ IᎢ &Ꮟ ஆலய வளர்ச்சியில் அக்கறை கொண்டு உழைத்தவர் மு. குமாரசாமிப்பிள்ளை அவர்கள். இவரது முயற்சியினால் 1950இல் தேர் ஒன்று அமைக்கப்பட்டது. 1969 இல் மகாகும்பாபிஷேகம் சிவபூர் வைத்தியநாதக் குருக்கள் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்தும் திருப்பணி வேலைகள் நடைபெற்றன. ஆலய கோபுர வாசலின் இடப்பக்கத்தில் புதிய மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. இது பொ. சண்முகநாதன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சேதுபதி குடும்ப உபயமாக இடம்பெற்றது. இது முற்றிலும் வெள்ளைக் கல்லினால் கட்டப்பெற்றது. தொடர்ந்து ‘பிள்ளையார் விலாஸ்” கணபதிப்பிள்ளை அவர்களால் இராஜ கோபுரத்திற்கு அத்திவாரம் இடப்பட்டது. 1974ஆம் ஆண டு அம்பலவாணர் கணபதிப்பிள்ளை குடும்பத்தவர்களால் வசந்த மண்டபம் புதிதாக மீள அமைக்கப்பட்டுப் புதுப் பொலிவுடன் மெருகு பெற்று விளங்குகிறது.
1976ஆம் ஆண்டு ஆலய பரிபாலன சபை புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டது. அதில் பின்வருவோர் இடம்பெற்றனர்.
1. திரு. கு. இராசதுரை – தலைவர்
2. திரு. நா. வீரசிங்கம் – உபதலைவர்
3. திரு. ப. அரசகேசரி – செயலாளர்
4. திரு. மு. சுந்தரலிங்கம் – உப செயலாளர்
5. திரு. க. நாகநாதபிள்ளை – பொருளாளர்
இப்பரிபாலன சபையில் 24 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இவர்களது காலத்திலும் பல திருப்பணி வேலைகள் இடம்பெற்றன.
* வசந்த மண்டபத்திற்கு எதிரே வாசலும் மண்டபமும் அமைக்கப்பட்டது.
* கோபுர வாசலின் வலப்பக்கம் புதிய மணிக்கூட்டுக்கோபுரம் திரு.து.சிற்சொருபன் அவர்களால் அமைக்கப் பட்டது.
* இராஜகோபுர வேலை தொடர்ந்து நடைபெற்றது.
* உள்வீதி தரை சீமந்து இடப்பட்டது. வெளிப்பக்கச்சுவர்கள் புனரமைப்பு செய்யப்பட்டன.
* மின்னிணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.
* திரு. மு. தியாகராசா அவர்களால் ஒலியமைப்புச் சாதனங்கள் உபயமாக வழங்கபபடடன.
* கிக்கடுவ நா.சண்முகம் நினைவாக அவர்களது மக்களால் பூந்தோட்ட மதில் வேலை பூரணப்படுத்தப்பட்டது.
1986ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் புதிய பரிபாலன சபை பொறுப்பேற்றது. பரிபாலன சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண் பாடுகள் ஏற்பட்டு புரிந்துணர்வு அடிப்படையில் இப்பரிபாலன சபை அமைக்கப்பட்டது. இதில் பின்வருவோர் இடம்பெற்றனர்.
1. திரு. ச. நல்லநாதன் – தலைவர்
2. திரு. நா. வீரசிங்கம் – உபதலைவர்
3. திரு. மு. சுந்தரலிங்கம் – செயலாளர்
4. திரு. பொ. பரராசசிங்கம் -உப செயலாளர்
5. திரு. மு. மகேந்திரன் – பொருளாளர்
இந் த பரிபாலன சபையில் 22 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இவர்களுடைய காலத்திலும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மீண்டும் 1988ஆம் ஆண்டு புதிய பரிபாலன சபை தெரிவு செய்யப்பட்டது. இதில் பின்வருவோர் இடம்பெற்றனர். –
1. திரு. ச. நல்லநாதன் – தலைவர்
2. திரு. க. இராசகோபால் – உபதலைவர்
3. திரு. யா. இராமநாதன் – செயலாளர்
4. திரு. பொ. கமலநாதன் – உப செயலாளர்
5. திரு. மு. மகேந்திரன் – பொருளாளர்
இப் பரிபாலனசபையில் 25 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். மகாகும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன.
* ஆலய வாசலினி இடப்பக்க மணிக்கூட்டுக் கோபுரத் திருப்பணி நிறைவேறியது.
* வாசலின் இரண் டு பக்கமும் மணிக் கூட்டுக் கோபுரம் எடுப்பாக வளர்ந்து நின்று இராஜகோபுர திருப்பணியை துரிதமாக்க வேண்டும் எனக்கூறின.
* கருங்கல் திருப்பணியில் மண்டபங்களில் குறை வேலையாக விருந்த கருங்கல வரிகள் புதிதாகக் கட்டப்பட்டன.
* எழுந்தருளி விநாயகருக்கு கருங் கல்லினால் புதிதாக கோயில் அமைக்கப்பட்டது.
* சுற்றுப்பிரகார கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டன.
(i) லக்குமி (ii) கெளரியம்பாள் (iII) சந்தான கோபாலர் (iv) வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் (v) நவக்கிரகம் (vi) சண்டேஸ் வரர் இவை அடியார்களால்
உபயமாக திருப்பணி செய்யப்பட்டன.
1. லக்குமி – திரு.க.யோகலிங்கம்அவர்கள் (யோகு ரேடிங் கொம்பனி)
2. கெளரியம்பாள் – திரு.ஆ.பொ.பரராசசிங்கம் குடும்பம்
3. சந்தானகோபாலர் – திரு.ஆ.வி.நாகலிங்கம் குடும்பம்சார்பாக திரு.மோகன அவர்கள்
4. சுப்பிரமணியர் – திரு.வே.செல்லத்துரை குடும்பத்தினர்
5. நவக்கிரகம் – திரு.க.சிவசரணம் குடும்பத்தினர்
6. சண்டேஸ்வரர் – திரு.ச.பழனிநாதன்,திரு.ச.சிதம்பரப்பிள்ளை
– மூலஸ்தானம் ஸ்துபி, வசந்தமண்டபஸ்துபி புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
– சபாமணிடபம் , மகாமணிடபம் சீமந்தினால் புதிதாக அமைக்கப்பட்டன. மகாமண்டப புனரமைப்பு வேலைகள் எமது ஊரைச் சார்ந்த பிரபல வர்த்தகர் திரு. ந. கேசுநாதன் (மாலவன்ஸ்) உபயமாக செய்யப்பட்டன.
– ஆலய உள்வீதிச் சுவர்கள் வர்ணம் பூசப்பட்டுச் சுவர்களில் திருமுறைகள் எழுதப்பட்டன.
இத்தகைய திருப்பணி வேலைகள் பூர்த்தியடைந்து 1990ஆம் ஆண்டு
(11 – 04-1990) பங்குனி 29ஆந் தேதி ஊரெழு பா. வைத்தியநாத சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுத் தொடர்ந்து ஆலயத்தில் சதுர்த்தி, விசேட தினங்கள் பிள்ளையார் கதை, நவராத்திரி, திருவெம்பாவை ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன.