வேலணை மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்
கடந்த மூன்று நூற்றாண்டுகளாக முடிப்பிள்ளையார் ஆலயம் இயங்கி வருகிறது. கர்ணபரம்பரைச் செய்தி களுடாகவும், நொத்தாரிசுமார்களின் சாசனங்கள் மூலமான சான்றுகள் மூலமாகவும் பல செய்திகளை அறியமுடிகிறது. இவை எல்லாவற்றிற் கும் மேலாக பிள்ளையார் மேல் பாடப்பட்ட பதிகங்கள், ஊஞ்சல் பாட்டுகள் பல செய்திகளைச் சொல்லி நிற்கின்றன.
(1). இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஆசிரியர் திரு. வி. கந்தப் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட திருவூஞ்சல் பாடல்கள்.
(2). முல்லைத்தீவு குமிழமுனையைச் சேர்ந்த சரவணமுத்துப் புலவரால் வேலணை மேற்கு மகாகணபதிப் பிள்ளையார் திருப்பதிகம் ஒன்று பாடப்பட்டுள்ளது.
(3). சரவணையைச் சேர்ந்த ஆ. தில்லை நாதப்புலவரினால் பிள்ளையார் பெயரில்
திருப்பதிகம் பாடப்பட்டுள்ளது.
இவற்றை நோக்கும் போது ஆலயம் தோன்றி இரண்டொரு நூற்றாண்டுகளின்
பின்னர் இவை பாடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம்.
சைவமும் தமிழும் ஒருங்கே போற்றப்பட்டது வேலணை மேற்கில்தான் என்று கூறப்படுகிறது. இது பெரும் அறிவாளிகளாகத் திகழ்ந்த கந்தப்பு உபாத்தியாயர், தம்பு உபாத்தியாயர், நாகலிங்க உபாத் தியாயர், இராசா உபாத்தியாயர், அப்பாத்துரை உபாத்தியாயர் ஆகியோர் வாழ்ந்த பூமி. யாழ்ப்பாணத்தின் முதல் சைவப்பத் திரிகை ‘சைவ சூக்குமார்த்த போதினி” வேலணை மேற்கு நடராசா அச்சுயந்திரசாலையில் அச்சிட் டு வெளியிடப்பட்டது. “நெல்லாவில்” என்ற இடத்தில் இந்த அச்சு இயந்திரசாலை அமைந்திருந்தது.
பல சந்ததிகளின் திருப் பணி வேலைகளால் இவ்வாலயம் வளர்ந்து நிலைபெற்று நிற்கின்றது என்றால் மிகையாகாது.
ஆரம்ப காலம் :
முடிப்பிள்ளையார் ஆலயம் எப்போது யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. வேலணைக்கும் வேதாரணிய ஆதீனத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. வேலணை மேற்குக் கிராமத்தில் வேதாரணிய ஆதீனத்தைச் சார்ந்த வரணிகரணவாய், சைவக்குருமார் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்னும் இருநெறிகளுக்கும் குலகுருவாய் அமைந்து தீட்சை, கோயில் உற்சவம் முதலிய கிரியைகளைச் செய்து வந்தார்கள். இவர்களுள் சந்திரசேகரக் குருக்கள் என ஒருவர் இருந்தார். இவர் முல்லைத்தீவுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
கோயில்களில் கும்பாபிஷேக கிரியைகளைச் செய்து வந்தவர் இவர். பெரிய புலத்திலுள்ள சுப்பிரமணியர் என்னும் சைவ உத்தமர் ஒருவரை முல்லைத்தீவுக்கு அழைத்துச்சென்று திரும்பிவரும் வழியில் நிழலுக்கு இழைப்பாறிய மரம் ஒன்றின்கீழ் சருகுகளைக்கூட்ட இப்பிள்ளையார் சிலை அங்கு காணப்பட்டது. “சுப்பிரமணியா இதை எடுத்து பெரியபுலத்திலே கொண்டுபோய் தாபிப்போம்” எனக்குருக்கள் சொல்லியபடியே அம் மூர்த்தியை ஒரு சாக்கில் கட்டிக் கொண்டு வந்தார். வரும் வழியில் குருக்களும் சுப் பிர மணியரும் மண்டை தீவுக்குச் சென்று வரவேண்டியிருந்ததால் மண்டைதீவுக்குச் செல்லும் வழியில் ஆலமரத்தடியில் வைத்துவிட்டு மீள அங்கிருந்து வரும் போது பிள்ளையாரையும் துக்கிக்கொண்டு வந்து சுப்பிரமணியர் தனக்குச் சொந்தமான காணியில் ஒரு ஓலைக்குடிசை அமைத்து பிள்ளையாரை வைத்துப் பூசித்ததாகக் கூறப்படுகிறது.
இதைவிட, சோழநாட்டில் உள்ள திருப்பூண்டியில் இருந்து வந்து வேலணை மேற்கில் வாழ்ந்தவர் பூண்டி மாமுதலியார் என்பவர். இவர் 17 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவருடைய மூத்த மகள் பெரிய நீலயினார் என்பவர்தான் பிள்ளையாரை வைத்து ஆலயத்தைக் கட்டினார் எனவும் கூறப்படுகிறது. இவருடைய செயற் பாட்டிலும் சுப்பிரமணியம் என்பவர் முல்லைத் தீவிலிருந்து கொண்டுவந்த பிள்ளையாரே இக்கோயிலில் தாபிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கொண்டு வரப்பட்ட பிள்ளையார் விக்கிரகம் பெரிய நீலயினார் என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பூண்டிமாமுதலிக் கும் இதற்கும் தொடர்பில்லை; சுப்பிரமணியருடைய காணியில் அமைக்கப்பட்டது என்று கூறுபவரும் உளர்.
சுப்பிரமணியர் என்பவருக்கு அம்பலவாணர், முருகப்பர், குமாரவேலர் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். சுப்பிரமணியரின் மனைவி கேணிக்கரையிலுள்ள கந்தர் என்பவரின் மகளாவார்.
இவர் பெரும்பொருள் வசதியுள்ளவராக இருந்தபடியால் மருமகன் சுப்பிரமணி யருடைய இக்கோயிலை சுதையினாலே கட்டுவதற்கு தொடங்கினார். இப்போதுள்ள கருங்கற்கோவிலுக்கு முன்பிருந்த கோவில் இதுவாகும்.
இக்கோயில் அமைந்துள்ள இடம் பரம்பரையாக சைவர்கள் வாழும் பகுதியாகும். சிதம்பரம், கரணவாய், வரணி, காரைநகர், வேலணை மேற்கு சைவர்கள் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தார்கள், வேத, ஆகம, தேவாரங்கள், புராணபடனம், சிவபூசை ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
அவர்களுடன் சுப்பிரமணியர் இணைந்து கொண்டார். பிள்ளையாருக்கு முதலாவது பூசகராக திருத்தொண்டு செய்யும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. சைவர்கள் முடிப்பிள்ளையரின் பூசகர்களாகவும் ஆலயத்தில் தேவார புராணபடனங்கள் ஒதுபவர்களாகவும் விளங்கினார்கள். இதனால் அவர்கள் ஆலய நிர்வாக, நித்திய நைமித்திய பூசைகளில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
1840 ஆம் ஆண்டு இவ்வாலயத்தில் முதலாவது கும் பாபிஷேகம் நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் இக்கோவிலின் ஆரம்பக் கர்த்தாக்களி னாலும் பொது மக் களினாலும் பராமரிக் கப்பட்டு வந்தது என்பதை 1880 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட சாசனம் எடுத்துக்காட்டுகிறது. –